Friday, March 30, 2012

அகந்தைக்கு காரணம் என்ன?


பேரியக்க மண்டல மலர்ச்சிகட்கு ஆதியானதே தெய்வம். அதன் மலர்ச்சி நிலைகளில் சிறந்த கட்டம் தான் மனிதன். அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, அவனுள் அடங்கியுள்ள முழுமைப் பொருளானது, தான் உயர்ந்தவன் என்று ஒலிக்கிறது.


இதனால் எந்தத் தவறும் இல்லை ஆயினும்,  ‘ எல்லா உயிர்களும் என்போன்று பிறப்பிலும், அததற்குரிய செயல்களிலும் சிறப்புப் பெற்றுத் தானே விளங்குகின்றன!’ என்ற உண்மையை மறந்து, ‘தான் மாத்திரம் உயர்ந்தவன்’ என்று எண்ணுகின்ற மயக்கம் தான் மனிதனுடைய அறிவின் சிறுமையைக் காட்டுகின்றது.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள கால எல்லையைக் கொண்டு இயங்குகின்ற உடலைப் பற்றியும், அதனு£டு இயங்குகின்ற உயிரைப் பற்றியும், அதன் படர்க்கை நிலையாகிய அறிவைப் பற்றியும், ஆக இறைவன் முதல் மனம் வரை உள்ள இயற்கைத் தத்துவத்தையும், மனித குலம் முழுவதும் ஒன்றாகப் பிணைக்கபட்டிருக்கின்ற சமுதாய அமைப்பினையும் மனிதர்கள் அறிகின்ற வரை இந்த மாதிரியான மயக்கம் ஒவ்வொருவருக்கும் இருப்பது இயல்பு தான்.    - மகரிஷி

No comments:

Post a Comment