
ஞானமானது நம் நாட்டில் பிறந்ததுதான். “துறவு” என்ற தத்துவம் இங்கே ஜனித்ததுதான்; ஆனால் அது குழப்பப்பட்டு இருக்கிறது. “துறவு” என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கேயாகிலும் ஓடி விடுவது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இடம மாறினால் துறவாகி விடுமா என்ன? ஒருவர் சென்னையிலுள்ள அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரை 500 மைல் தொலைவிலுள்ள ஊருக்கு மாற்றிவிட்டார்களென்றால் இன்னொரு இடத்துக்குத் தான் போய்விடகிறார் & இது துறவாகி விடுமா? அதே போல இடமாற்றமோ அல்லது செயல் மாற்றமோ, அல்லது எந்த வெளி மாற்றமோ துறவு அல்ல.