Showing posts with label வினை விளைவு நீதி. Show all posts
Showing posts with label வினை விளைவு நீதி. Show all posts

Friday, April 13, 2012

திருவிளையாடல்


சுழற்தட்டு விளையாட்டில் சுற்றிவிட்டோன் பெறல்போல்
சொல் எண்ணங்கள் செயல்கள் காந்த அலையாகி
சுழன்றோடி விரைவு ஒக்கச் சென்று முடிவான
சுத்தவெளி அழுத்தத்தால் பின்னோக்கி வந்து
சுழன்றியங்கும் சீவகாந்தக் கருமையம் ஈர்த்து
சுருக்கி இருப்பாய் வைத்துக் காலத்தில் மலர்ந்தும்
சுழற்சி ஈர்ப்புக் காப்புன் திருவிளையாட்டென்று
சொல்லாமல் விளக்கிவிட்ட சொற்கடந்த பொருளே.   


                                                                                                        - ஞானக்களஞ்சியம் 1658